உறவுக்கு மறுத்த மருமகளை தீ வைத்து கொளுத்த முயன்ற மாமனார்

Subscribe to Oneindia Tamil


நெல்லை: உடலுறவுக்கு வர மறுத்த மருமகளை தீ வைத்து கொளுத்த முயன்ற மாமனார் மீது மருமகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், தச்சநல்லூரில் உள்ள பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். சென்னையில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் இவருக்கும், பாளை சாமாதனபுரத்தை ஆனந்தவள்ளிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆனந்தவள்ளிக்கு அவருடைய மாமனார் ராஜ் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ராஜ் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

மாமனாரின் பாலியல் தொல்லை குறித்து தனது கணவரிடம் ஆனந்தவள்ளி புகார் கூறியும் அதை அவர் காதில் வாங்கவில்லையாம்.

இதனால் மனமுடைந்த ஆனந்தவள்ளி, மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதவை சந்தித்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் அளித்த பின்னர் ஆனந்தவள்ளி கூறியதாவது,

கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் சேர்ந்து என்னிடம் கூடுதலாக 10 பவுன் நகை, ரூ.25,000 கேட்டு கொடுமைப்படுத்தினர். இது மட்டுமில்லாது மாமனாரின் பாலியல் தொந்தரவுக்கு நான் மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் என்மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தவும் முயன்றனர். நான் அவர்களிடம் தப்பித்து என் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+