நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அறவே இல்லை: ராமதாஸ்
சென்னை: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அறவே இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உரிய பிரதி நிதித்துவம் வழங்கக் கோரி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அறவே இல்லை. அமெரிக்காவில் உள்ளது போல இங்கும் நீதிபதிகள் நியமனத்தில் பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குறைந்தப் பட்சம் 5 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.
இது முதல் கட்ட போராட்டம் தான். அடுத்த கட்டமாக நீதிமன்ற பணிகள் முடங்கும் வகையில் போராட்டம் அமையும் என்றார் ராமதாஸ்.