வ.உ.சி, திலகர் பயங்கரவாதிகளா?: டிஎன்பிஎஸ்சி கேள்வி தாளில் விபரீதம்
மதுரை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பயங்கரவாதிகள் என்ற கேள்வியைக் கேட்டு பதில் வரிசையில் திலகர், வ.உ.சி, கோகலே ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 3,368 டைப்பிஸ்ட்கள், மற்றும் 507 சுருக்கெழுத்தர்களை தேர்வு செய்ய குரூப் 4 தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்த தேர்வை சுமார் 40,000 பேர் எழுதினார்கள்.
தேர்வுக்கான வினாத்தாளின் 20வது பக்கத்தில் 'ஏ' வரிசை கேள்வி ஒன்றில் கீழ் காணுபவர்களில் பயங்கரவாதி யார் என்று உள்ளது. அதில் பதில் செய்யும் வரிசையில் பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரனார், கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் பெயர்கள் இருந்தன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்டத்தின்போது மிதவாதப் போக்கு கொண்ட தலைவர்களுக்கு எதிராக தீவிரப் போக்குடன் போராடுவதே சரி என்று குரல் கொடுத்தவர் தான் திலகர்.
கேள்வியைக் கேட்கும் போது சுதந்திரப் போராட்டத்தில் என்ற வார்த்தையையும் சேர்த்து தீவிர போக்கு காட்டியவர் அல்லது தீவிர போராட்டத்தை கையாள வேண்டும் என்று கூறியவர் யார் என்று கேட்டிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.
ஆனால், மொட்டையாக பயங்கரவாதி என்று கேட்டு வைத்துள்ளதால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications