மாணவிகளை கிண்டல் செய்த திமுக கவுன்சிலர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: மாணவிகளை கிண்டல் செய்த திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த மயிலாடியைச் சேர்ந்த நடராஜன் (43) பேரூராட்சி திமுக கவுன்சிலராக உள்ளார்.
இவர் அப்பகுதியில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், மற்றும் டியூசனுக்கு செல்லும் மாணவிகளை கிண்டல் செய்து வந்தார். இவரது தொல்லை எல்லை மீறவே மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதில் சில பெற்றோர்கள் மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த கவுன்சிலர் மீது உடனே நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார்.
இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் நடராஜனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications