For Daily Alerts
Just In
கேரளாவில் பேருந்து விபத்து: 60 மாணவர்கள் காயம்
வயநாடு: கேரள மாநிலத்தில் மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 60 மாணவர்கள் காயமடைந்தனர்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கல்லுவயல் என்ற இடத்தில் இன்று காலை தனியார் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவ-மாணவிகள் சென்ற பேருந்து ஒரு திருப்பத்தில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 60 மாணவ-மாணவிகளும் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு வயநாடு மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அதே பள்ளியை சேர்ந்த பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்தை மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Comments
Story first published: Friday, February 1, 2008, 13:28 [IST]