மண்ணெண்ணை குடித்த குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து வாயில் வைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், காளத்திமடத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி பத்ரகாளி. இவர்களது பத்துமாத ஆண் குழந்தை மகேந்திரன்.
2 நாட்களுக்கு முன்பு மகேந்திரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மண்ணெண்ணை இருந்த பாட்டிலைப் பார்த்தான்.
அதை பால் பாட்டில் என நினைத்து விட்ட அவன் எடுத்து வாயில் வைத்து குடித்து விட்டான். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே மகேந்திரன் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.
இதைப் பார்த்துப் பதறிய பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது அந்த பச்சைக் குழந்தை.












Click it and Unblock the Notifications