சென்னையில் மீண்டும் வாயுக் கசிவு-மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil

கடந்த டிசம்பர் 6ம் தேதியன்று இதே பகுதியில் உள்ள சென்னை பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து (சிபிசிஎல்) வாயுக் கசிவு ஏற்பட்டு பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றும் வாயுக் கசிவு ஏற்பட்டது. போலீசார் நடத்திய ஆய்வில் மணலியில் உள்ள ஒரு உரத் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து உரத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாயுக் கசிவால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications