மகாத்மா ஒரு 'மாயை'-பிரிட்டிஷாரின் வரலாற்று அறிவு

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு டிவி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிய வந்துள்ளது. 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் இப்படித்தான் கூறியுள்ளனராம்.
மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், கிளியோபாட்ரா, புளோரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோர் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வெறும் மாயை, கற்பனையான கதாபாத்திரங்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனராம்.
இங்கிலாந்தின் மிகப் பெரிய தலைவர் என்று அறியப்பட்டவர் சர்ச்சில். ஆனால் அவரையே கற்பனைக் கதாபாத்திரம் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை விட காமெடி என்னவென்றால், கற்பனைக் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ்தான் உண்மையான மனிதர் என்றும் பெரும்பாலானவர்கள் ெதரிவித்தது தான்.
இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து பிரபல இங்கிலாந்து வரலாற்றியலாளர் காரெலி பர்னட் கூறுகையில், பெரும்பாலான இங்கிலாந்து மக்களுக்கு பொது அறிவே இல்லை என்பதையே இது காட்டுகிறது. கடந்த காலங்களில் வாழ்ந்த மாபெரும் தலைவர்களை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்.
இங்கிலாந்துக் கல்வி முறையில் பெரிய ஓட்டை இருப்பதையே இது காட்டுகிறது. இல்லாதவர்களை இருப்பதாக கூறுவதும், உலகில் மாபெரும் சாதனைகளைப் படைத்த மகாத்மா காந்தி போன்றவர்களை கற்பனைக் கதாபாத்திரம் என்று கூறுவதும் கேலிக்கூத்தாக உள்ளது.
ராபின் ஹூட் குறித்த ஒரு சீரியல் சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பானது. எனவே ராபின் ஹூட் போன்றவர்கள் உண்மையிலேயே இருந்தார்கள் என்று இங்கிலாந்து மக்கள் நம்புவதில் ஆச்சரியம் இல்லை என்றார் அவர்.
உலகையே கட்டி ஆண்ட வெள்ளையர்களில் இப்படியும் சிலரா?












Click it and Unblock the Notifications