அதிகாரிகள் தூண்டுதலால் அப்பாவிகள் மீது வழக்கு - ராம. கோபாலன்
நெல்லை: தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் உயரதிகாரிகளின் தூண்டுதலினால் அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளதாக இந்து முண்ணனி அமைப்பாளர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் குமார் பாண்டியன் சகோதரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து இந்து முண்ணனி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியதாவது, இந்த கைது நடவடிக்கை எதிர்பார்த்ததுதான். இந்து அல்லாத ஒரு உயரதிகாரியின் தூண்டுதலின் பேரில் அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக போலீசாரின் இந்த ஜோடனை வேலை நடந்தது. தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் வைத்து அவர்களை சித்ரவதை செய்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அலுவலகம் அருகே உள்ள கடைகாரர்களை விசாரிக்குமாறு கூறினோம். ஆனால் அவர்களிடம் சரியாக விசாரிக்கவில்லை. தவறான கைது நடவடிக்கை முலம் காவல்துறை மீது அவநம்பிக்கை ஏற்படும்.
அரசு முஸ்லிம்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு பொய் என்று நிருபிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications