விமான நிலையத்தில் சிக்கிய ரூ. 30 லட்சம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இரண்டு பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 30 லட்சம் பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கோவையிலிருந்து நேற்று இரவு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் ரமேஷ் (40), வெங்கடேஷ் (27) ஆகிய இருவர் சென்னை வந்தனர். அவர்கள் பெருமளவு பணத்துடன் வருவதாக வருமான வரித்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலையத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவர்களைப் பிடித்து விசாரணை மற்றும் சோதனை நடத்தினர்.அப்போது அவர்கள் வைத்திருந்த ரூ. 30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்தப் பணத்திற்கு அவர்களிடம் கணக்கு எதுவும் இல்லை.
தாங்கள் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், தொழில் நிமித்தம் இந்தப் பணத்தைக் கொண்டு வந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர்.
பின்னர் இருவரும் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். விமான நிலைய போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications