சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கும் பிஎட் மாணவர்கள்
தென்காசி: தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 9 மாதங்கள் கடந்தும் சான்றிதழ் கிடைக்காததால், தென்காசி பிஎட் கல்லூரி மாணவர்கள் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் மனு அளித்தனர்.
தென்காசி அருகே நல்லமணி யாதவ் பிஎட் கல்லூரி உள்ளது. இந்த நிர்வாகத்தின் சார்பில் கலைக்கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் ஒரே வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2005-06ம் கல்வி ஆண்டில் துவக்கப்பட்ட பிஎட் கல்லூரிக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் இணைப்பு கேட்டு விண்ணபித்தது. பல்வேறு காரணங்களால் இணைப்பு கிடைக்காமல் போனது.
இதையடுத்து அந்த ஆண்டு கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பரில் 100 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியிடபட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சான்றிதழ் கிடைக்காத 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தர் சிந்தியா பாண்டியனை சந்தித்து மனு அளித்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட அவர் கல்லூரி தொடர்பான வழக்கு நடந்து வருவதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications