தென்காசியில் ஆயுதங்கள் பதுக்கிய 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசியில் சமீபகாலமாக நடந்து வரும் மதரீதியிலான கொலைகள் தொடர்பாக போலீசார் பலரை கண்காணித்து வருகின்றனர். இரண்டு தரப்பினரிடையே உணர்வுகளை துண்டுவிடும் சிலரை அழைத்து எச்சரித்தும் வருகின்றனர். பல இடங்களில் போலீஸ் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் தென்காசி அருணாச்சலபுரம் தெருவை சேர்ந்த கலைஞர் என்ற சங்கர், மலையான் தெருவை சேர்ந்த முருகன் என்ற வைரம், சுடலை மகன் லிங்கம், மைதீன் மகன் ரகுமான், செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தீவான் மகன் அமீர்ஜான் ஆகிய 5 பேர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசியில் நடந்த 6 பேர் கொலை சம்பவத்தில் இவர்களில் சிலருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications