செங்கோட்டை-சென்னை அகல ரயில் துவக்கம்
கொல்லம்-விருதுநகர்-தென்காசி-திருநெல்வேலி-திருச்செந்தூர் அகல ரயில் பாதை திட்டம் 1997-1998ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
357 கிமீ தூரம் கொண்ட இப்பாதையை அகல பாதையாக மாற்ற ரூ.577.61 கோடியில் மதிபபீடு செய்யப்பட்டது.
விருதுநகரில்-தென்காசி இடையிலான பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் தென்காசியில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை இயங்கத் துவங்கியது.
இந்த ரயிலை தினமும் சென்னைக்கு இயக்க வேண்டும் என தென்காசி வர்த்தக சங்கம் எனக் கோரிக்கை விடுத்ததையடுத்து, தற்போது வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இதன் பின்னர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டையிலிருந்து இயக்க வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
செங்கோட்டையிலிருந்து-தென்காசி வரையுளள 8 கிமீ அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்தவுடன் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட செங்கோட்டையில் ரயில் நிலையததில் இருந்து சென்னைக்கு பொதிகை ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி செங்கோட்டை-தென்காசி இடையே அமைக்கப்பட்டுள்ள அகர ரயில் பாதையையும், தென்காசியில் இருநது செங்கோட்டை வரை நீடிககப்பட்டுள்ள பொதிகை ரயிலையும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழாவிற்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். தென்னக ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் வரவேற்றார். எம்பி அப்பாத்துரை, கருப்பசாமி எம்எல்ஏ, பீட்டர் அல்போன்ஸ், நகரசபை தலைவர் ரகீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications