செங்கோட்டை-சென்னை அகல ரயில் துவக்கம்
கொல்லம்-விருதுநகர்-தென்காசி-திருநெல்வேலி-திருச்செந்தூர் அகல ரயில் பாதை திட்டம் 1997-1998ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
357 கிமீ தூரம் கொண்ட இப்பாதையை அகல பாதையாக மாற்ற ரூ.577.61 கோடியில் மதிபபீடு செய்யப்பட்டது.
விருதுநகரில்-தென்காசி இடையிலான பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் தென்காசியில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை இயங்கத் துவங்கியது.
இந்த ரயிலை தினமும் சென்னைக்கு இயக்க வேண்டும் என தென்காசி வர்த்தக சங்கம் எனக் கோரிக்கை விடுத்ததையடுத்து, தற்போது வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இதன் பின்னர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டையிலிருந்து இயக்க வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
செங்கோட்டையிலிருந்து-தென்காசி வரையுளள 8 கிமீ அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்தவுடன் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட செங்கோட்டையில் ரயில் நிலையததில் இருந்து சென்னைக்கு பொதிகை ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி செங்கோட்டை-தென்காசி இடையே அமைக்கப்பட்டுள்ள அகர ரயில் பாதையையும், தென்காசியில் இருநது செங்கோட்டை வரை நீடிககப்பட்டுள்ள பொதிகை ரயிலையும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழாவிற்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். தென்னக ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் வரவேற்றார். எம்பி அப்பாத்துரை, கருப்பசாமி எம்எல்ஏ, பீட்டர் அல்போன்ஸ், நகரசபை தலைவர் ரகீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!













Click it and Unblock the Notifications