இலங்கையிலிருந்து மீண்டும் அகதிகள் வருகை - 10 பேர் வந்தனர்
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் மீண்டும் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் அகதிகளாக விமானம் மூலம் சென்னை வந்தனர்.
பின்னர் அவர்கள் அகதிகள் மறுவாழ்வு துறை ஆணையரின் அனுமதிக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர் 10 பேரும் தங்கள் பெயரை பதிவு செய்வதற்காக மண்டபம் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகளில் ஒருவரான நடராஜா கூறுகையில், நான் ஒரு விவசாயி. விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. எந்த நேரமும் குண்டுச் சத்தம் கேட்டபடி இருக்கிறது. உயிருக்குப் பயந்துதான் இங்கு வந்து விட்டோம் என்றார்.
கடந்த 1ம் தேதி 9 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். இந்த நிலையில் மேலும் 10 பேர் வந்துள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications