அப்ப சொர்க்கமா இருந்துச்சு...ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் அமைதியாக திகழ்வதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதாகவும், தமிழகத்தில்தான் விலைவாசி குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.
ஆனால் இது முற்றிலும் தவறான தகவல். மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது. எனது ஆட்சிக்காலத்தில் இது சொர்க்கமாக திகழ்ந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. நக்சலைட்டுகள் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது.
இது இப்போது வந்ததல்ல. 2006ம் ஆண்டு மே மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலே தீவிரவாத நடவடிக்ைககள் தமிழகத்தில் தலை தூக்கி விட்டன.
கடந்த 20 மாதங்களில் தமிழகத்தில் பல படுகொலைகள் நடந்துள்ளன. தீவிரவாதிகளிடத்திலும், விடுதலைப் புலிகள் விவகாரத்திலும் திமுக அரசு மென்மையான அணுகுமுறையை கையாளுகிறது.
விடுதலைப் புலிகள் இக்கத் தலைவர்கள் அன்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவிக்கிறார். இப்படிப்பட்டவர்கள், விடுதலைப் புலிகளையோ அல்லது தீவிரவாதிகளையோ ஒடுக்குவார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்.
விலைவாசி உயர்வு குறித்தும் முதல்வர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். மக்களை திசை திருப்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 33 சதவீதமாக இருந்த விலை உயர்வு இப்போது 118 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications