சென்னையில் மகிரிஷி யோகியின் பக்தர் தற்கொலை
சென்னை: சமீபத்தில் நெதர்லாந்தில் மரணமடைந்த மகரிஷி மகேஷ் யோகியின் பக்தர் ஒருவர், யோகியின் மறைவுத் துயரைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
ஆழ்நிலை தியானத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் மகேஷ் யோகி. சமீபத்தில் தனது 91வது வயதில், நெதர்லாந்து நாட்டில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் யோகியின் மறைவைத் தாங்க முடியாமல் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொளத்தூர் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். 49 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். விருப்ப ஓய்வு பெற்றவர்.
சங்கமித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் இவருக்கு உள்ளனர். தினசரி நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவது ஆனந்தனின் வழக்கம். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். யோகியின் தீவிர பக்தர்களில் ஒருவர்.
யோகி மரணமடைந்தது முதல் பெரும் வருத்தத்தில் இருந்து வந்தார் ஆனந்தன். யாருடனும் பேசாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ஆனந்தன்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், நான் கடவுளிடம் செல்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் குருநாதர், கடவுள் மகரிஷி சென்ற இடத்திற்கு நான் செல்கிறேன். எனது ஆன்மா கடவுள் இருக்குமிடத்திற்கு செல்கிறது என்று எழுதி வைத்துள்ளார்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications