சென்னையில் மகிரிஷி யோகியின் பக்தர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நெதர்லாந்தில் மரணமடைந்த மகரிஷி மகேஷ் யோகியின் பக்தர் ஒருவர், யோகியின் மறைவுத் துயரைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

ஆழ்நிலை தியானத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் மகேஷ் யோகி. சமீபத்தில் தனது 91வது வயதில், நெதர்லாந்து நாட்டில் மரணமடைந்தார்.

இந்த நிலையில் யோகியின் மறைவைத் தாங்க முடியாமல் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொளத்தூர் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். 49 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். விருப்ப ஓய்வு பெற்றவர்.

சங்கமித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் இவருக்கு உள்ளனர். தினசரி நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவது ஆனந்தனின் வழக்கம். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். யோகியின் தீவிர பக்தர்களில் ஒருவர்.

யோகி மரணமடைந்தது முதல் பெரும் வருத்தத்தில் இருந்து வந்தார் ஆனந்தன். யாருடனும் பேசாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ஆனந்தன்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், நான் கடவுளிடம் செல்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் குருநாதர், கடவுள் மகரிஷி சென்ற இடத்திற்கு நான் செல்கிறேன். எனது ஆன்மா கடவுள் இருக்குமிடத்திற்கு செல்கிறது என்று எழுதி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+