நக்ஸல்களிடம் துப்பாக்கிகள் பறி கொடுத்த 3 ஏட்டுகள் சஸ்பெண்ட்
தர்மபுரி: நக்ஸல்களிடம் துப்பாக்கிகளை பறி கொடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தின் ஏட்டுகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், அங்கே அரை தூக்கத்தில் இருந்த காவலரை மிரட்டி, லாக்-அப் அறையின் பூட்டுகளை உடைத்து அங்கே வைக்கப்பட்டிருந்த 6 துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கியை கொள்ளையடித்துச் சென்றது.
போலீஸ் நிலையத்திலேயே நடந்த இந்தக் கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நக்ஸலைட்டுகளின் கை வரிசையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச் சம்பவத்தையடுத்து வனப் பகுதியை ஒட்டியுள்ள தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த காவல் நிலையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி. சஞ்சய் அரோரா, சேலம் சரக டி.ஐ.ஜி. செண்பகராமன், எஸ்பி நஜ்முல் ஹோடா ஆகியோர் பார்வையிட்டு அதியமான்கோட்டை போலீஸ் நிலைய காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
நக்ஸல் வேட்டையில் தீவிரமாக உள்ள கூடுதல் டி.ஜி.பி. விஜய்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்தார். சம்பவம் நடந்தபோது இரவு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுகள் சுப்பிரமணி, ராஜா, ராஜமாணிக்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள கிருஷ்ணநாயக்கன் கொட்டாய், வெள்ளாளபட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில் சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஏட்டுகள் சுப்பிரமணி, ராஜா, ராஜ மாணிக்கம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. நஜ்முல் ஹோடா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர்கள் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டதாக நஜ்முல்ஹோடா கூறியுள்ளார். நக்ஸல்கள் வந்தபோது ஒரே ஒரு காவலர் மட்டுமே பணியில் இருந்ததாகத் தெரிகிறது. மற்றவர்கள் இரவு ரோந்து என்ற பெயரில் எல்லா காவல் நிலையங்களிலும் நடக்கும் இரவு நேர கடைகளில் மாமூல் வசூலுக்குப் போய்விட்டதாகத் தெரிகிறது.
இருந்த ஒரு காவலரும் விழிப்புடன் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications