நக்ஸல்களிடம் துப்பாக்கிகள் பறி கொடுத்த 3 ஏட்டுகள் சஸ்பெண்ட்
தர்மபுரி: நக்ஸல்களிடம் துப்பாக்கிகளை பறி கொடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தின் ஏட்டுகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், அங்கே அரை தூக்கத்தில் இருந்த காவலரை மிரட்டி, லாக்-அப் அறையின் பூட்டுகளை உடைத்து அங்கே வைக்கப்பட்டிருந்த 6 துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கியை கொள்ளையடித்துச் சென்றது.
போலீஸ் நிலையத்திலேயே நடந்த இந்தக் கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நக்ஸலைட்டுகளின் கை வரிசையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச் சம்பவத்தையடுத்து வனப் பகுதியை ஒட்டியுள்ள தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த காவல் நிலையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி. சஞ்சய் அரோரா, சேலம் சரக டி.ஐ.ஜி. செண்பகராமன், எஸ்பி நஜ்முல் ஹோடா ஆகியோர் பார்வையிட்டு அதியமான்கோட்டை போலீஸ் நிலைய காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
நக்ஸல் வேட்டையில் தீவிரமாக உள்ள கூடுதல் டி.ஜி.பி. விஜய்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்தார். சம்பவம் நடந்தபோது இரவு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுகள் சுப்பிரமணி, ராஜா, ராஜமாணிக்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள கிருஷ்ணநாயக்கன் கொட்டாய், வெள்ளாளபட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில் சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஏட்டுகள் சுப்பிரமணி, ராஜா, ராஜ மாணிக்கம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. நஜ்முல் ஹோடா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர்கள் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டதாக நஜ்முல்ஹோடா கூறியுள்ளார். நக்ஸல்கள் வந்தபோது ஒரே ஒரு காவலர் மட்டுமே பணியில் இருந்ததாகத் தெரிகிறது. மற்றவர்கள் இரவு ரோந்து என்ற பெயரில் எல்லா காவல் நிலையங்களிலும் நடக்கும் இரவு நேர கடைகளில் மாமூல் வசூலுக்குப் போய்விட்டதாகத் தெரிகிறது.
இருந்த ஒரு காவலரும் விழிப்புடன் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications