வேலூர் தங்க கோவிலுக்கு செல்லும் கருணாநிதி
சென்னை: வேலூரில் கட்டப்பட்டுள்ள தங்க கோவிலுக்கு முதல்வர் கருணாநிதி அடுத்த வாரம் செல்கிறார்.
ரூ. 300 கோடியில் 1.5 டன் தங்கத்தால் கட்டப்பட்டுள் ஸ்ரீ லட்சுமி நாராயணி அம்மன் கோவிலுக்கு வரும் 16ம் தேதி கருணாநிதி செல்வார் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீபுரம் என்ற இடத்தில் 31 வயதான ஸ்ரீ சக்தி அம்மா என்பவர் உருவாக்கியுள்ள கோவில் இது. கட்டப்பட்ட சில மாதங்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்களை இந்தக் கோவில் ஈர்த்துவிட்டது.
குழந்தைகள் நலத் திட்டத்துக்காக இந்த கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ நாராயணி பீடம் வழங்கவுள்ள நிதியுதவியைப் பெற கருணாநிதி செல்கிறார்.
கடந்த ஆண்டு சாய் பாபா, கருணாநிதியை சந்தித்தார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் மாபெரும் திட்டத்துக்கு பாபா செய்த உதவிக்காக அவுருக்கு நடந்த பாராட்டு விழாவில் கருணாநிதி பங்கேற்றார். அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்த மாதா அமிர்தனந்தமயி பங்கேற்க நிகழ்ச்சியிலும் கருணாநிதி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் குழந்தைகள் நலத் திட்டத்துக்கு நாராயணி பீடம் வழங்கும் உதவியைப் பெற அங்கு செல்கிறார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications