திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி விழா தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் மாசி திருவிழா இன்று தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.
இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5 முதல் 5.30 மணிக்குள் மாசித்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொடடி விழா நாட்களில் தினமும் காலையும், இரவும் சுவாமி, அம்பாளின் வீதியுலா நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப் 15ம் தேதி இரவு 7 மணிக்கு மேலக்கோவிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறும்.
7ம் திருவிழாவான பிப் 17ம் தேதி அதிகாலை சண்முகபெருமானின் உருகுசட்ட சேவையும் நடைபெறும். மாலை 4.15க்கு சண்முகபெருமானின் சிவப்பு சாத்தி வீதியுலாவும், பிப் 18ம் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி வீதியுலாவும் 12 மணிக்கு மேல் பச்சை சாத்தி வீதியுலாவும் நடைபெறும்.
10ம் திருவிழாவான பிப் 20ம் தேதி தேராட்டம் நடக்கிறது. 21ம் தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications