For Daily Alerts
Just In
தொண்டியில் வெடிபொருள் குவியல்-ஒருவர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி கடற்கரைப் பகுதியில் போலீஸார் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகமான முறையில் நடமாடிய கார்மேகம் (43) என்பவரை போலீஸார் பிடித்தனர்.
அவர் வைத்திருந்த சாக்குப் பையை சோதனையிட்டபோது அதில் பெருமளவில் வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்துத. அதில் 100 டெட்டனேட்டர்கள், 83 ஜெலட்டின் குச்சிகள், 10 மீட்டர் நீளமுடைய வயர் ஆகியவை இருந்தது.
அவரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, அவற்றை மீன் பிடிப்பதற்காக கொண்டு சென்றதாக கார்மேகம் தெரிவித்தார். இருப்பினும் விடுதலைப்புலிகளுக்கு கடத்துவதற்காக அவற்றை கார்மேகம் கொண்டு சென்றாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, February 12, 2008, 20:19 [IST]