மனைவியை கற்பழித்தவனுக்கு 'கட்'
Subscribe to Oneindia Tamil
மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மனைவியைக் கற்பழித்த நபரின் ஆணுறுப்பை கணவர் 'கட்' செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரா மாவட்டம் சாதா கோட்வாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேஷ்ராஜ் சிங். இவரது மனைவியை உதய் வீர் சிங், தீப் சந்திரா ஆகியோர் பலாத்காரம் செய்து கற்பழித்து விட்டனர்.
இதனால் கோபமடைந்த தேஷ்ராஜ், உதய் வீர் சிங்கைத் தேடிப் போனார். அசதியில் உதய் வீர் சிங் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மீது பாய்ந்த தேஷ்ராஜ் சிங், உதய் வீர் சிங்கின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டினார்.
வலியால் துடித்த உதய் வீர் சிங்கை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உதய் வீர் சிங் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications