நாசிக் வன்முறையில் ஒருவர் பலி
மும்பை: ராஜ் தாக்கரே கைதைக் கண்டித்து நாசிக் நகரில் வெடித்த வன்முறையில் ஒரு பொறியாளர் கொல்லப்பட்டார்.
நாசிக்கில் கடந்த 2 நாட்களாகவே மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ்களை தாக்குவது, வட இந்திய வியாபாரிகளை அடிப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த வன்முறைக்கு ஒரு பொறியாளர் பலியானார். நாசிக்கின், வடலா நகா பகுதியில் உள்ள சாய்நாத் நகரில் வசித்து வந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர் அம்பாதாஸ் தாரோவ் (53) என்பவர் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இன்னொருவர் படுகாயமடைந்தார்.
20க்கும் மேற்பட்ட மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.
நேற்று மாலையில் ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்ட பின்னர் வன்முறை மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது. இருப்பினும் அவர் ஜாமீனில் விடுதலையான பின்னர் வன்முறைச் சம்பவங்கள் படிப்படியாக குறைந்தன.












Click it and Unblock the Notifications