விழுப்புரம் விபத்தில் 3 மலேசிய தமிழ் பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே டாடா சுமோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மலேசியத் தமிழர்கள் 3 பேர் உள்பட 4 பேர் பலியாயினர். இருவர் காயமடைந்தனர்.
மலேசியாவில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த வளர்மதி (45), வேணி (48), ஈஸ்வரி (28) ஆகியோர் கோலாலம்பூர் செல்வதற்காக மதுரையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு டாடா சுமோ காரில் சென்றனர்.
அதை டிரைவர் பாண்டி என்பர் ஓட்டினர். இன்று காலை விழுப்புரத்தையடுத்து பிடிகம் என்ற இடத்தில் இந்த கார் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் மூன்று பெண்களும் டிரைவரும் சம்பவ இடத்திலேேய பலியாயினர்.
அதிலிருந்த மேலும் இருவர் காயமடைந்தனர். அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications