துபாயில் இந்திய டிரைவரைக் காணவில்லை

இந்தியாவைச் சேர்ந்தவர் அப்துல்லா அப்துல் காதர் (56). துபாயில் உள்ள லக்கானி டிரேடிங் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். துபாயில் உள்ள வாபி சிட்டி மால் என்ற வணிக வளாகத்தில், தனது ஸ்பான்சரின் மகளை சனிக்கிழமை இறக்கி விட்டுள்ளார் காதர். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.
அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் குறித்து துபாயில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், விபத்து சிகிச்சைப் பிரிவுகள், கிளினிக் உள்ளிட்டவற்றில் விசாரணை நடத்தியும் காதர் குறித்தத் தகவல் ஏதும் இல்லை.
காதர் காணாமல் போனது குறித்து பார் துபாய் ரிபா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் துபாய் இந்தியத் தூதரக அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸிஸ் பணியாற்றி வருகிறார் காதர். அவர் காணாமல் போனதால் அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காணாமல் போன அன்று காதர், தங்க வண்ணத்திலான டயோட்டா காம்ரி வாகனத்தில் பயணித்தார். அந்த வாகனத்தின் எண் எப்.40907.
காதர் குறித்த தகவல் தெரிந்தால் அக்பர் அலி, செல்போன் எண் 050-4522839 என்பவரையோ அல்லது சுஜாயுதீன், செல்போன் 050-7890397 என்பவரையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications