தஸ்லிமா விசாவை நீட்டித்தது மத்திய அரசு
டெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீனின் விசாவை ஒரு வழியாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வங்க தேசத்திலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வரும் தஸ்லீமாவுக்கு எதிராக இங்கும் அவ்வப்போது முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அவர் தாக்கப்பட்டார். இந் நிலையில் தஸ்லீமாவை மாநிலத்தை விட்டு வெளியேற்றியது மேற்கு வங்க இடதுசாரி அரசு.
இதையடுத்து டெல்லியில் அடைக்கலம் புகுந்துள்ளார் தஸ்லீமா. தனது விசாவை நீட்டிக்கக் ேகாரி கடந்த பல மாதங்களாக அவர் கோரி வந்தார். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில் அரவது விசாவை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் மத ஒற்றுமைக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் எதிராக தஸ்லீமா நடந்து கொள்ளாததால் விசா நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications