ஓரினச் சேர்க்கை-வாலிபரை கொன்ற போலீஸ்காரர் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த வாலிபரை இரு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த ஆயுதப்படை காவலர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி பம்பிங் ஸ்டேஷனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நெல்லை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரரான மார்த்தாண்டம் என்பவர் அறிமுகமானார். மார்த்தாண்டத்துக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால், இவர் ஒரு ஓரினச் சேர்க்கை வெறியன்.

இவர் வெள்ளைசாமியை வற்புறுத்தி இந்த கேவலமான செயலில் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளார்.

இந் நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன் வெள்ளைசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்தபோது மார்த்தாண்டம் தான் அவரைக் கொலை செய்தார் என்று தெரியவந்தது.

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த வெள்ளைசாமியை நெஞ்சு மற்றும் வயிறு பகுதிகளில் சராமரியாக மிதித்து அவரை கொன்றுள்ளார் மார்த்தாண்டம்.

இதையடுத்து மார்த்தாண்டம் மீது புகார் பதிவு செய்தனர் போலீசார். இதையடுத்து அவர் நீண்ட விடுப்பில் சென்றார். ஆனால், அவரை போலீசார் கைது செய்யாமல் இருந்தனர்.

இந் நிலையில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு சமீபத்தில் அதிகாரிகளின் பார்வைக்குச் சென்றது. இதையடுத்து 2 வாரங்களுக்கு முன் மார்த்தாண்டத்தை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள் அவரை உடனே கைது செய்யவும் உத்தரவிட்டனர்.

இைதயறிந்த மார்த்தாண்டம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனையடுத்து மார்த்தாண்டம் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+