For Quick Alerts
For Daily Alerts
Just In
வீரமணி ஒரு பொருட்டே அல்ல-கிருஷ்ணசாமி
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கும், விஜயகாந்த் கட்சிக்கும் ரகசிய உறவு உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருப்பதை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
அமைக்க முடியாத நிலையில் தற்போது காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற திமுக உதவி இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தின் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இது குறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி தர்மத்தை நாங்கள் பாதுகாப்போம்.
கி.வீரமணி ஏதோ பேசியுள்ளார். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
புலிகள் ஆதரவாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார். அவரை நாங்கள் நம்புகிறோம் என்றார் கிருஷ்ணசாமி.
Comments
Story first published: Sunday, February 17, 2008, 11:27 [IST]