கொசாவோ விடுதலை: இலங்கை பீதி!
கொழும்பு: செர்பியாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக தன்னை கொசாவோ அறிவித்துள்ளது மிகப் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என விடுதலைப் புலிகளை மனதில் வைத்து இலங்கை அச்சம் தெரிவித்துள்ளது.
கொசாவோ மற்றும் ஈழப் போராட்டத்துக்கும் இடையே பெருமளவில் வித்தியாசம் இல்லை.
கொசாவோ பிராந்தியத்தில் பெரும்மையினராக இருக்கும் அல்பேனிய வம்சாவளியினர் மீது செர்பியா அடக்குமுறையைக் கையாண்டது. சிறுபான்மையினரான ரஷ்ய வம்சாவளியினர் ராஜபோகமாக இருந்த நிலையில் அல்பேனியர்கள் மீது வன்முறையும், கொலை வெறியாட்டமும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் உதவியால், தற்போது கொசாவோ தனி நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.
இலங்கை எதிர்ப்பு:
இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த பிரிவினையை ஏற்க முடியாது என்றும் அது தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இந்த முடிவு வரலாறு காணாத பயங்கர விளைவுகளுக்கு வித்திடும்.
உலகின் அமைதியும், பாதுகாப்பும் பெரும் பாதிப்பை சந்திக்கும். கற்பனை செய்து பார்க்கக் கூடிய அளவுக்கு பின் விளைவுகள் இருக்கும்.
செர்பியக் குடியரசிலிருந்து கொசாவோ பிரிந்ததை இலங்கை ஏற்காது, அங்கீகரிக்காது.
தன்னிச்சையாக கொசாவோ எடுத்துள்ள இந்த முடிவு, செர்பியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு. இது வருத்தத்துக்குரியது.
சுமூகமான அரசியல் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். கொசாவோவுக்கு பெரிய எதிர்காலம் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஈழம் மற்றும் விடுதலைப் புலிகளை மனதில் கொண்டே கொசாவோ விடுதலைக்கு கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications