தண்டவாளத்தில் விரிசல்-வைகை எக்ஸ்பிரஸ் தப்பியது

இன்று காலை மதுரையிலிருந்து சென்னைக்குக் கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
அப்போது கொடை ரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னர் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
விருதுநகரில்..
இதேபோல விருதுநகர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரை - மணியாச்சி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து 2 மணி நேரத்திற்குப் பாதிக்கப்பட்டது.
ஹவுரா, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.
சென்னை ரயில் தப்பியது..
இதேபோல சென்னையிலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழைக்குச் சென்று எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலில் சிக்காமல் தப்பியது.
திருச்சூர் - எர்ணாகுளம் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் சென்றபோது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயிலின் ஓட்டுநருக்குத் தகவல் போனது.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்திலிருந்து சென்னை ரயில் தபப்ியது.
தண்டவாளம் விரைவாக சரி செய்யப்பட்டு, அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில் ஆலப்புழைக்குப் புறப்பட்டுச் சென்றது.













Click it and Unblock the Notifications