மருத்துவனையின் அலட்சியம்-பஸ் ஸ்டாண்ட்டில் பிரசவம்
ஷிவ்புரி (மத்தியப் பிரதேசம்): அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை மறுக்கப்பட்ட பழங்குடி கர்ப்பிணிப் பெண்ணுக்கு பஸ் ஸ்டான்டில் கூட்டத்துக்கு நடுவே குழந்தை பிறந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹாதிங்கடா கிராமத்தைச் சேர்ந்த ராம் அவ்தார் என்பவரின் மனைவி ராம்வெட்டி 30 கர்ப்பிணியாக இருந்தார்.
பிரசவத்துக்காக ஷிவ்புரி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராம்வெட்டிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், உடனே ரத்தம் கொண்டு வர வேண்டும், இல்லாவிட்டால் அவரை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிட வேண்டும் என அவரது உறவினர்களிடம் கூறினர்.
ரத்தத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனையில் இருந்து அவர்கள் வெளியே வந்து பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு வைத்து அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதையடுத்து அங்கேயே ஜன சந்தடிக்கு நடுவே அவருக்கு குழந்தை பிறந்தது. இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து நிருபர்கள் வரும் முன்பே ஓடி வந்த அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து விளக்கம் கேட்டு மருத்துவமனையின் பெண்கள் நல மருத்துவர் உமா ஜெயினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 3 நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மேலும் இரு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications