நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவர் இடங்கள் அதிகரிக்குமா?: குழு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அகில இந்திய மருததுவ குழுவினர் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு 65 பேராசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் மேலும் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அகில இந்திய மருததுவ கவுன்சிடம் தமிழக அரசு கோரி வருகிறது.

இதைத் தொடர்ந்து அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் பல்வேறு குழுவினர் நெல்லை மருததுவ கல்லூரி மற்றும் ஐகிரவுண்ட் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைகள, கட்டிட வசதிகள், பேராசிரியர்கள் எண்ணிக்கை போன்றவைகளை ஆய்வு செயது வந்தனர்.

இப்போது இந்த ஆய்வுப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந நிலையில் நேற்று டாக்டர் அகர்வால் தலைமையில் டாக்டர்கள் மும்ரோ, திவாங்கர் ஆகியோர் கொண்ட அகில இந்திய மருத்துவ கவுன்சில் டீம் மருத்துவக் கல்லூரியின் டீன் விநாயகத்திடன் ஆலோசனை நடத்தியது.

மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பகுதி, மருந்தகப் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பகுதி, பேருகால வார்ட் அவரச சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு, காசநோய் வார்ட், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு போன்றவறறையும் இவர்கள் ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த குழுவினர் அரசு மருத்துவ கல்லுரிக்கு சென்றனர். அங்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் எண்ணிக்கையை சரி பார்த்தனர். மேலும் வகுப்பறைகள், லேப் அறைகள், கட்டிட வசதிகள், இருக்கை வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு திருப்திகரமாக முடியும் பட்சத்தில் மருததுவ கல்லூரியில் ஆண்டுதோறும் 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+