இங்கிலாந்து, இந்திய-மியான்மார் எல்லையில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி& லண்டன்: இந்திய-மியான்மார் எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவில் மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அதிகாலை 3.51 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இங்கிலாந்தில்...
அதே போல இன்று அதிகாலை இங்கிலாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. லண்டனில் இருந்து வடக்கே ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.7 புள்ளிகளாக பதிவாகியுளளது.
லண்டனுக்கு 205 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கத்தி்ன் மையம் இருந்தது. இதில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் அதிர்ந்ததால் மக்கள் அலறிக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
இந்த நில அதிர்வால் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவி்ல்லை.












Click it and Unblock the Notifications