ரயில்வே பட்ஜெட்டில் ஒண்ணுமே இல்ல-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2008-2009-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி ரயில்வே பட்ஜெட்டாக இருக்கும்.
இந்த பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் என அமைச்சர் மந்திரி லாலு பிரசாத் யாதவ் சொல்லி இருக்கிறார். அவரை வேண்டுமானால் மகிழ்விக்கக்கூடிய பட்ஜெட்டாக இருக்கலாம்.
மூத்த குடிமக்கள், மாணவிகளுக்கு சலுகை உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளனர். முழுக்க முழுக்க வாக்கு வங்கியை மனதில் கொண்டே ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் இப்படித்தான் இருக்கும் என்பது முன்பே அனைவருக்கும் நன்கு தெரியும்.
ரயிலில் அனைத்து வகுப்புகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண மக்கள் அதிகம் பயணம் செய்யக்கூடிய 2ம் வகுப்புக்கான கட்டணத்தை வெறும் 5 சதவீதம் குறைத்திருப்பது துரதிர்ஷ்டம்.
ஆனால், முதல் வகுப்பு ஏ.சி கட்டணத்தை அதிகளவு குறைத்திருக்கிறார்கள். ரயில்வே துறை எல்லா நிலைகளிலும் லாபம் ஈட்டி உள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் குறைந்த அளவே கட்டணத்தை குறைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சில புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. சாதாரண மக்களுக்காக குறிப்பாக எதுவும் செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு ரெயில்வே துறைக்கு ரூ.25,000 கோடி லாபம் கிடைத்திருப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறுகிறார். ஆனால், புதிய வழித்தடங்கள், அகல ரெயில் பாதை மாற்றும் பணி உள்பட புதிய திட்டங்கள் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டை சுகாதார ஆண்டாக ரயில்வே அறிவித்தது. ஆனால், ரயில்வே நிலையங்கள், ரயில்கள், பயணிகள் ஓய்வறை ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு சில புதிய வழித்தடங்கள், கூடுதல் ரயில் பாதைகள், அகல ரயில் பாதை மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டாலும், தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து அமைப்பது பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மொத்தத்தில், இந்த ரயில்வே பட்ஜெட் முழுக்க முழுக்க நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் எவ்விதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லை என ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications