கோவை அருகே மினி லாரி மோதி 3 விவசாயிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை அருகே மதுக்குளத்தில் மின் லாரி மோதி 3 விவசாயிகள் பலியாயினர்.
மைவாடிபிரிவு என்ற இடத்தில் இன்று அதிகாலை இச் சம்பவம் நடந்தது.
உடுமலை காட்டுப் பகுதியில் கால்நடைகளை மேய்க்க விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க இந்த மூவரும் சுமார் 100 ஆடு, மாடுகளுடன் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
பலியான விவசாயிகளின் பெயர்கள் ரங்கசாமி, லட்சுமணன், மணி என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மீது மோதிய லாரி ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாலக்காடு சென்று கொண்டிருந்து.
உடுமலை காட்டுப் பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு கால்நடைகள் மேய்க்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications