'ஏறக்கட்டப்பட்ட' திரிசூல் ஏவுகணை திட்டம்!

தரையிலிருந்து விண்ணி்ல் உள்ள டார்கெட்களைத் தாக்கும் ஏவுகணை தான் திரிசூல். எதிரி நாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்களைத் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வந்தது.
சுமார் 9 கி.மீ. தூரம் வரை பாயக் கூடியது. இந்த தூரத்தை 6 வினாடிகளில் கடக்கும் சக்தி கொண்டதாக திரிசூல் உருவாக்கப்பட்டது.
இந் நிலையில் ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அளித்த எழுத்து மூலமான பதிலில்,
திரிசூல் ஏவுகணைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ரூ. 282.68 கோடி செலவிடப்பட்டுள்ளது. (இது வெளியி்ல் சொல்லப்படும் கணக்கு)
ஆனால் இந்த ஏவுகணை தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளும் தோல்வியையே சந்தித்துள்ளன.
எனவே இந்தத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் ஒருங்கிணைந்த ஏவுகணை வளர்ச்சித் திட்டம் கைவிடப்படாது.
இந்தத் திட்டத்தின் கீழ் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை நோக்கி தாக்கும் அக்னி, குறுகிய தூர ஏவுகணையான பிருத்வி ஆகியவை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அக்னி மற்றும் 250 கிலோமீட்டர் மற்றும் 350 கிலோமீட்டர் தொலைவுக்கு பாய்ந்து செல்லும் பிருத்வி ஏவுகணைகளுக்காக இதுவரை ரூ. 372.29 கோடி அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது.
இருப்பதிலேயே அதிக செலவு வைத்த ஏவுகணை ஆகாஷ்தான். விண்ணில் இருந்து பாய்ந்து இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணைத் திட்டத்துக்காக ரூ. 516.86 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை உருவாக்க நீண்ட காலம் பிடித்தது. ஆனால் சோதனைகளில் நல்ல முன்னேற்றமும், நல்ல முடிவும் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் அந்தோணி.












Click it and Unblock the Notifications