நாஞ்சில் தாக்கப்பட்ட இடத்தில் வைகோ பொது கூட்டம்!
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் திமுகவினர் ரகளை செய்து மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை அடித்து உதைத்தனர்.
இந் நிலையில் இன்று அதே இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பொதுக் கூட்டம் நடக்கவுள்ளது.
இதற்காக பேராளம்மன் கோவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சம்பத் மீதான தாக்குதல் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம், அவரது தம்பி மகேந்திரன், அரசு வழக்கறிஞர் சாகுல் அமீது உள்பட 9 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதே போல திமுகவினரின் காரை உடைத்தாக மதிமுக நகரச் செயலாளர் பல்லவி ராஜா மற்றும் மதிமுகவை சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் இன்று இரவு குளித்தலையில் சம்பத் தாக்கப்பட்ட அதே இடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.
இதையடுத்து இன்று காலை முதலே அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications