'கிரியேட்டிவிட்டி'-மூளையில் 'இடஒதுக்கீடு' இல்லை!

அமெரிக்காவின் தேசிய காது கேளாமை மற்றும் பிற குறைபாடு தொடர்பான ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தீவிர சிந்தனை மற்றும் கற்பனைத் திறனில் ஒருவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போது, அவரது மூளையின் பெரும்பாலான பகுதிகள் செயல்படுவதில்லை. அந்த சமயத்தில் சிறிய அளவிலான மூளைப் பகுதியே செயல்படுகிறது.
கிரியேட்டிவ் சிந்தனையின்போது மூளையின் செயல்பாடுகளைக் கணிப்பது மிகுந்த சிரமமானதாகும். பல்வேறு காரணிகள் அதில் தொடர்புடையதாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஜாஸ் இசைக் கலைஞர்களை வைத்து இது தொடர்பான சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஆறு பேரும் இரண்டு விதமான சூழ்நிலையில் கீபோர்ட் வாசிக்கும்போது, அவர்களது மூளையின் செயல்பாடு எப்.எம்.ஆர்.ஐ ஸ்கேனிங் மூலம் கண்காணிக்கப்பட்டது.
எப்.எம்.ஆர்.ஐ என்பது, மூளையின் பல்வேறு பகுதிகளுக்கும் ரத்தம் எந்த அளவுக்குப் பாய்கிறது என்பதை கணிப்பதாகும்.
இந்த ஆய்வின்போது சாதாரண ஒரு ட்யூனை இசைக் கலைஞர்கள் வாசித்ததற்கும், புதிதாக ஒரு ட்யூனை உருவாக்கி வாசித்ததற்கும், மூளையில் நிறைய வேறுபாடு ஏற்படுவதை கணிக்க முடிந்தது.
இந்த வேறுபாடு, மூளையின் முன்பகுதியில் உள்ள, சிந்தனையைத் தூண்டும் கார்டெக்ஸ் பகுதியில், ஏற்பட்டது.
அதேசமயம், 'டார்சாலேட்டரல் பிரிபிரன்டல் கார்டெக்ஸ்' எனப்படும், மூளையின் பிரதான பெரும் பகுதி சுத்தமாக எந்த செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதும் தெரிய வந்தது. ஆனால் மூளையின் சிறிய பகுதியான 'மீடியல் பிரி பிரன்டல் கார்டெக்ஸ்' பகுதி அதீத செயல்பாட்டுடன் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த சிறிய பகுதிதான் சுய சிந்தனைகளுக்கும், நமது நடத்தைகளுக்கும் முக்கிய காரணமாகும். ஒரு நிகழ்ச்சி குறித்து விவரித்தபோதும், அதன் பின்னர் அந்த நபர் சிந்திக்கத் தொடங்கியபோதும், இந்தப் பகுதிதான் அதிக அளவில் செயல்பட்டது.
செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மூளையின் பெரும்பாலான பகுதிகள், செயல்படாமல் இருக்கும்போது கூட, அந்த நபரால் பல புதிய சிந்தனகளை உருவாக்கவும், அதை செயல்படுத்தவும் முடிந்தது.
எனவே மூளையின் குறிப்பிட்ட பகுதிதான் கிரியேட்டிவிட்டுக்குக் காரணம் என்று கூற முடியாது. ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுதான் கிரியேட்டிவிட்டிக்கு வழி வகுப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications