For Daily Alerts
Just In
நாகர்கோவில் அருகே அம்மன் சிலை தகர்ப்பு-பதற்றம்
குளச்சல்: குமரி மாவட்டம் வெள்ளிசந்தை உண்ணம்குளம் அருகே ஆலமூடு இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டரை அடி உயர அம்மன் சிலை உள்ளது.
இந்நிலையில் யாரோ மர்ம நபர்கள் அம்மன் சிலையின் மீது பாறங்கல்லை தூக்கி போட்டுள்ளனர்.
இதில் அம்மன் சிலையின் தலை மற்றும் கைப்பகுதி ஆகியவை முற்றிலும் சிதைந்தது. காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த அப்பகுதி பொதுமக்கள் அம்மன் சிலை சிதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கும் தகுவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மன் சிலை தகர்க்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Friday, February 29, 2008, 20:20 [IST]