காதலியை கட்டி தண்டவாளத்தில் போட்ட காதலன்!!
மதுரை: திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கடுப்பான காதலன், பெண்ணின் கை, கால்களைக் கட்டி தண்டவாளத்தில் போட்டார். அக்கம் பக்கத்தினர் உரிய நேரத்தில் பார்த்து அவரை மீட்டதால் அந்த அப்பாவிப் பெண் உயிர் பிழைத்தார்.
மதுரை மாவட்டம் அரசப்பட்டியில் வசித்து வருபவர் பிச்சையம்மாள் (30). இவருடையை கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனார்.
தனிமையில் வசித்து வந்த பிச்சையம்மாளுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இந் நிலையில் ஆசைத்தம்பி வேறொரு மணந்தார். இதைத் தட்டிக் கேட்ட பிச்சையம்மாளை கள்ளிக்குடி பகுதிக்கு கூட்டிச் சென்று அவரது கை, கால்களைக் கட்டி தண்டவாளத்தில் போட்டு விட்டு போய் விட்டார்.
அந்தப் பகுதி வழியாக வந்த சிலர் பிச்சையம்மாள் கிடந்த கோலத்தைதப் பார்த்து பதறி அவரை மீட்டு கட்டை அவிழ்த்து விட்டனர். பின்னர் கள்ளிக்குடி காவல் நிலையத்திற்குச் சென்ற பிச்சையம்மாள் ஆசைத்தம்பி மீது புகார் கொடுத்தார்.
போலீஸார் ஆசைத்தம்பி மீது புகார் பதிவு செய்து கைது செய்தனர். ஆள் எஸ்கேப் ஆகிவிட்டதால் அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications