சிபிஎஸ்இ தேர்வுகள் தொடக்கம்-சென்னையில் 72 மையங்கள்
டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பாடத் திட்ட பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கின. நாடு முழுவதும் மொத்தம் 13.13 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
மொத்தம் 5018 தேர்வு மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 375 மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் மட்டும் 1109 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண் பார்வையற்றவர்கள், மாற்றுத் திறன் உடையவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகிய சிறப்புப் பிரிவின் கீழ், 10ம் வகுப்பில் 2478 பேரும், 12ம் வகுப்பில் 2132 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னையில், இந்த ஆண்டு 5000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 72 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முதல் புதிய முறையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்த கேள்விகளில் 20 சதவீத கேள்விகள், சிந்தித்து எழுதும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது மக்கப் செய்து வந்து தேர்வு எழுத முடியாத அளவுக்கு இவை சிந்தித்து எழுதும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகளில் 10 சதவீதம், குறுகிய விடைகளை அளிக்கும் வகையிலான கேள்விகளாக இருக்கும்.
10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி முடிகிறது, ஏப்ரல் 2ம் தேதி 12ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்சில்..
அதே போல துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் உள்ள சுமார் 110 இந்தியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இந்தத் தேர்வை இன்று முதல் எழுதுகின்றனர்.
யுஏஇயில் மட்டும் 52 பள்ளிகள் உள்ளனர். இங்கு 2,200 மாணவ, மாணவிகள் பயில்வது குறிப்பிடத்தக்கது.
-
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications