மதுரையில் 5 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் 5 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
இன்று திருப்பரங்குன்றம் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த மருதுபாண்டி (29), அஜித்குமார் (28) ஆகியோரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் இவர்கள் இருவரும் வழிப்பறி கொள்ளையர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலை வைத்து அப்துல்லா, விஜயகுமார் என்ற விஜி (23), பாலகிருஷ்ணன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications