For Daily Alerts
Just In
இயந்திர கோளாறு: ஷார்ஜா-சென்னை விமானம் ரத்து
திருச்சி: ஷார்ஜாவிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஷார்ஜாவிலிருந்து-சென்னை செல்ல வேண்டிய அந்த விமானம் 43 பேருடன் திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 5.20 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது.
இந் நிலையில் விமானத்தின் ஹைட்ராலிக் கருவிகளில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விமான பயணிகளில் பாதிப்பேர் ஏர் டெக்கான் விமானத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.
Comments
Story first published: Monday, March 3, 2008, 10:03 [IST]