போலி பாஸ்போர்ட்-சென்னையில் ஆப்பிரிக்கர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த ஆப்பிரிக்க நாட்டவரை குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் மனாகா டொகும்போ (36). இவர் இன்று அதிகாலை லுப்தான்ஸா விமானம் மூலம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.
குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து பார்த்தபோது அது போலி என தெரியவந்தது.
கடந்த 2007ம் ஆண்டு மும்பை வந்த டொகும்போ அங்கிருந்த ஏஜெண்ட் மூலம் இந்த பாஸ்போர்ட்டை பெற்றது தெரியவந்தது.
அவரை கைது செய்த குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications