பட்டக் பகலில் இ.கம்யூ பிரமுகர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்தது. இச் சம்பவம் திருவாரூரில் நடந்தது.
ஜெயக்குமார் (40) என்ற அந்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் மாங்குடி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தார்.
இவரை இன்று காலை இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திருவாரூர் பாண்டவயாறு பாலத்தில் வைத்து தடுத்தி நிறுத்தியது.
பின்னர் அவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications