13 வயது மகளை கற்பழித்த வக்கிர தந்தை
Subscribe to Oneindia Tamil
மும்பை: மத்திய மும்பையில் 13 வயது மகளை கற்பழித்த வக்கிர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய மும்பை, வாடலா ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக் (40). இவருக்கு திருமணமாகி ஷாகிதா ஷேக் (35) என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள்.
வீட்டில் மனைவி, மகன் இல்லாத நேரத்தில் தனது மகளின் கற்பை ஷேக் சூறையாடி விட்டார். நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என சொல்லி விட்டு வெளியே சென்று விட்டாராம்.
வெளியே சென்று வீடு திரும்பிய ஷாகிதா ஷேக், தனது மகள் அழுது கொண்டிருந்ததை பார்த்து என்னவென்று விசாரித்துள்ளார். அவர் நடந்ததை சொன்னவுடன் ஆத்திரமடைந்த ஷேக் மகளுடன் காவல் நிலையம் சென்று கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
தற்போது போலீசார் மகளை கற்பழித்த தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications