மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ உயர்வு
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் முன் தேதியிட்டு இது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி உயர்வை அளிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
அதன்படி அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இது ஜனவரி மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவோருக்கும் இதே அளவிலான உயர்வு கிடைக்கும்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 41 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இனிமேல் அது 47 சதவீதமாக இருக்கும்.
அகவிலைப்படி உயர்வால் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 10 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்றார் முன்ஷி.












Click it and Unblock the Notifications