For Daily Alerts
Just In
நாடாளுமன்றத்தில் தாக்கலான கர்நாடக பட்ஜெட்
டெல்லி: கர்நாடக மாநிலத்துக்கான 2008-09ம் ஆண்டு பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கர்நாடத்தில் பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் அரசு கவிழ்ந்ததையடுத்து அங்கு மே மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இந் நிலையில் அரசு ஏதும் இல்லாத நிலையில் அந்த மாநிலத்துக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து அடுத்த 6 மாதங்களுக்கான மாநிலத்தின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை சிதம்பரம் தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டு இறுதியில் கர்நாடகத்தின் பட்ஜெட்டில் ரூ. 92.27 கோடி உபரியாக இருக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மே மாதத்தில் ஆட்சிக்கு வரும் அரசு இன்னொரு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
Comments
Story first published: Monday, March 10, 2008, 14:15 [IST]