For Daily Alerts
Just In
குடிநீர் வினியோகம் கோரி சாலையில் படுத்த தாசில்தார்
நெல்லை: பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற தாசில்தார் குடி நீர் வினியோகம் கேட்டு சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார்.
நெல்லை 27வது வார்டுக்கு உட்பட்ட பாளை என்.ஜி.ஓ.பி காலனி 15-வது குறுக்கு தெருவில் கடந்த சில வாரங்களாக குடி தண்ணீர் வினியோகம் முறையாக நடைபெறவில்லை. இது தொடர்பாக பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த முன்னாள் தாசில்தார் வெங்கடாசலம் இன்று காலை திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பொறியாளர் நாராயண நாயர், உதவி கமிஷனர் சாந்தி உள்ளிட்ட அலுவலர்கள் வெங்கடாஜலத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி குடி நீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து வெங்கடாஜலம் தனது போராட்டத்தை கைவிட்டார்.
Story first published: Monday, March 10, 2008, 11:40 [IST]