'ஹோமா': வாலிபரைக் கொன்ற போலீஸ்காரர் சரண்!
நெல்லை: வாலிபருடன் ஓரினச் சேர்க்கை வைத்துக் கொண்டு, அவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த போலீஸ்காரர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் மனூர் அருகேயுள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்ற ரவிக்குமார். மேலப்பாளையம் அருகே பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.
குறிச்சியைச் சேர்ந்தவர் மார்த்தாண்டம். நெல்லை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு குறிச்சி பைபாஸ் அருகேயுள்ள ஒரு கடையில் வெள்ளைசாமி டிபன் வாங்குவதற்காக சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த மார்த்தாண்டம் வெள்ளைசாமியை அழைத்து கொண்டு பைபாஸ் ரோட்டிலுள்ள பாலையங்கால்வாய்க்கு சென்றார். பின்னர் வெள்ளைசாமி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மார்த்தாண்டத்தை தேடினர். துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் மார்த்தாண்டம் சஸ்பெண்ட் செய்யபபட்டார்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் 2 முறை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவை நிராகரிக்கப்பட்டதையடுத்து மார்த்தாண்டம் நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.