புற்றுநோயை கண்டறியும் அதிநவீன ஸ்கேனர்-ஜெ தொடங்கி வைத்தார்

பின்னர் அங்குள்ள நவீன ஸ்கேன் கருவியை ஜெயலலிதா பார்வையிட்டார். விழாவுக்கு ஜெயலலிதாவுடன் சசிகலாவும் வந்திருந்தார்.
இந்த கருவிகள் குறித்து லிபர்ட்டி ஸ்கேன் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.வெங்கடேஷ், இயக்குனர் டாக்டர் பி.ரமேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையி்ல்,
இந்த மருத்துவ ஆய்வுக் கூடத்தில் அதிக சக்தி வாய்ந்த 1.5டி எக்ஸ்ட்ரா ஹை டெபினிஷன் 16 சேனல் எம்.ஆர்.ஐ. கேபிள் தொழில்நுட்பம் மற்றும் லோ-ரேடியேஷன் மல்டி டிடெக்டர் சிடி உள்ளிட்ட அதிநவீன மருத்துவ சோதனை வசதிகள் உள்ளன.
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாக கண்டறிவதற்கான பிரஸ்ட் எம்.ஆர்.ஐ. பெர்புயூஷன்-ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆய்வு, மேமோகிராம் மற்றும் சோனோ மேமோகிராம் உள்ளிட்ட சோதனை வசதிகள் உள்ளன.
தெற்காசியாவிலேயே முதன்முறையாக குறைந்த கதிரியக்க பல்நோக்கு நோய்க்கூறு ஆய்வு சிடி ஸ்கேனரை அறிமுகப்படுத்துகிறோம்.
இதன் மூலம் சிடி ஆஞ்சியோகிராம், முழு உடல் பரிசோதனை, வெர்ச்சுவல் என்டோஸ்கோபி, டென்டல் பேக்கேஜ் மற்றும் பீடியாட்ரிக் புரோட்டோகால்ஸ் போன்ற பல சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றனர்.












Click it and Unblock the Notifications